Regularization of absence during COVID-19 pandemic period
Source : http://utilities.cept.gov.in/dop/pdfbind.ashx?id=5705
கொரானா நோய் தொற்று காலத்தில் பணிக்கு வராத வரமுடியாத ஊழியர்களின் விடுப்புகள் முறைப்படுத்துவது சம்பந்தமாக அஞ்சல்துறை உத்தரவு வெளியிட்டுள்ளது.
கீழ்க்கண்ட காரணங்கள் இருப்பின் அந்த ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்ததாக கணக்கில் கொண்டு பணி காலமாக கருதப்படும்
1.அலுவலகத்தில் கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால்
2. அலுவலகப் பணி நிமித்தம் காரணமாக பயணம்/ டெபுடேஷன் சென்றிருந்தால்
3. சம்பந்தப்பட்ட அதிகாரியின் உத்தரவின் பேரில் வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்கப் பட்டிருந்தால்
4.கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் (Containment Zone ) வசிப்பவராக இருந்தாலோ கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து அந்தப்பகுதி விலக்கி கொள்ளும் வரை
****************
ஊழியருக்கு கொரானா பாசிட்டிவ் உறுதிசெய்ய பட்டநிலையில் அவர் அவரது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டிருந்தால் ..
(1) அவருக்கு 20 நாட்கள் COMMUTTED விடுப்பு வழங்கலாம் .மருத்துவ சான்று இல்லாமல் வெறும் கொரானா பாசிட்டிவ் என சான்றிதழ் மட்டும் போதுமானது.
(2) COMMUTEED விடுப்பு இல்லாத பட்சத்தில் 15 நாட்கள் Special CL அதனை தொடர்ந்து EL /HPL யை (EL /HPL இல்லாத பட்சத்தில் EXOL )தொடர்ந்து 5 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்
ஊழியருக்கு கோவிட் பாசிட்டிவ் ஆனபின் அவர் மருத்துவமனையில் இருந்தால்
(1)அவருக்கு 20 நாட்கள் COMMUTTED விடுப்பு வழங்கலாம் (மருத்துவ சான்று இல்லாமல் வெறும் கோவிட் பாசிட்டிவ் என சான்று மட்டும் போதும் )
(ii )COMMUTTED விடுப்பு இல்லாத பட்சத்தில் 15 நாட்கள் சிறப்புவிடுப்பு அதனை தொடர்ந்து EL /HPL யை (EL /HPL இல்லாத பட்சத்தில் EXOL )தொடர்ந்து 5 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் .
(III) 20 நாட்களுக்கு பிறகும் விடுப்புதேவைப்பட்டால் எஞ்சியுள்ள நாட்களுக்கு COMMUTTED விடுப்பு வழங்கலாம் .மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின்பு நோய்த் தொற்றில் இருந்து மீள்வதற்கு மேலும் விடுப்பு தேவைப்பட்டால் அவருக்கு தகுதியுள்ள விடுப்பு விடுப்பு விதிகளின்படி உரிய அதிகாரி வழங்கலாம். Commuted Leave இல்லாத பட்சத்தில் மட்டுமே 15 நாட்கள் Special CL அல்லது /EL EOL ஆகிய விடுப்புகள் அளிப்பது குறித்து பரிசீலிக்கலாம்.
****************
3 ) குடும்ப உறுப்பினர்களுக்கு கொரானா நோய் தொற்று பாசிட்டிவ் எனில்
(i) 15 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கலாம். (ஊழியரை சார்ந்த குடும்ப உறுப்பினருக்கு கொரானா நோய்த் தொற்றுக்கான பாசிடிவ் சான்றிதழ் போதும்.)
*****************
இந்த உத்தரவு கொரானா நோய்த் தொற்றின் காரணமாக முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 24.3.2020 முதல் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும். எனவே முந்தைய காலத்திற்கும் ஊழியர்கள் விண்ணப்பித்து இந்த விடுப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.



Plaas 'n opmerking